- இந்த கண்டேட்டரு... 5 .50 டிக்கெட்டுக்கு 6 ரூபா கொடுத்தா... 50பைசாவ அமுக்கிர்றான் ... இன்னொருத்தன் 5 ரூபா கொடுத்தா 50 பைசாவுக்கு என் கண்ணு முன்னால சண்ட போட்டு எறக்கி விடுறான் ...இன்னாடா !நாயம்?
2.நாம பஸ்ஸ விட்டு எறங்கும்போது ,முண்டி அடிச்சு ஏறுரவங்கள , ஹசாரே கணக்கா யோக்கியன் மாதிரி திட்டுறோம் .. ஆனா நாம ஏறும்போது முண்டி அடிக்கிறோம் ... என்னா வில்லத்தனம் ?!
3.பஸ்சுல ஏறி உக்காந்தமா... பிச்சக்காரன் பிச்ச கேட்டா... சில்லறை இல்லைன்னு சொல்றது ! கொடுக்குறதும் ,கொடுக்காததும் அவனவன் விருப்பம் ... இஷ்டம் இல்லைனா சொல்ல வேண்டியது தான ... என்னமோ கர்ண மகாராஜா மாதிரியும் .சில்லறை இல்லாததல தர்மம் பண்ண முடியாத மாதிரியும் ..... என்னத்துக்கு டயலாக்கு ..?!